அய்யப்பன் பற்றிய புராணக் கதைதான் என்ன?


பத்மாசூரன் என்பவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் வேண்டினான். சிவனும் முன்யோசனையின்றி கேட்ட வரத்தைத் தருவதாக வாக்களித்தான். நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை எரிந்து விடவேண்டும் என்று வேண்டினான். சிவனும் அவ்வாறே வரம் அளித்தான்.

வரத்தைப் பெற்ற பத்மாசூரன் சிவன் தலையிலேயே கையை வைத்துச் சோதனை செய்து பார்க்க முயன்றான். சிவன் தப்பித்து ஓட, பத்மாசூரன் விரட்டிக் கொண்டு போனான்.

இந்த நிலையில், தனது மைத்துனன் சிவனுக்கு மோசம் விளைந்ததே எனக் கருதி, அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டி, திருமால் மோகினி உருவெடுத்து எதிரே வந்தான்.

பத்மாசூரன் மதிமயங்கி மோகினியிடம் (திருமால்) நெருங்கினான். இப்படி வந்தால் இணங்கமாட்டேன். குளித்துச் சுத்தமாக வர வேண்டும் என்று மோகினி கூற, குளிக்கச் சென்று தன் தலையைத் தன் கையால் அவன் தேய்த்தபோது, பத்மாசூரன் தலை எரிந்து சாம்பலாகிவிடுகிறான்.

பிறகு ஒளிந்திருந்த சிவனை, திருமால் அழைத்து நடந்ததைக் கூறினான்.
சிவனுக்குச் சபலம் ஏற்பட்டு காமவெறி உச்சத்தை அடைந்தது!
மீண்டும் திருமால் மோகினியானான்!
அவனோடு கூடும் முன்பே, இந்திரியம்
வழிந்தது. கையிலே பிடித்தான்.
கையிலேயே பிள்ளை பிறந்தது.
அதை கையப்பன் என்று சொல்லி பிறகு அய்யப்பன்
ஆகி மருவியது!

அரி (திருமால்), கரன் (சிவன்) இருவருக்கும்
பிள்ளை பிறந்ததால் அரிகரன் திருமாலுக்கும்,
சிவனுக்கும் பிறந்த பிள்ளை என்ற பொருள்
வந்ததாம்!

Source:
Via Fb (Ansar Basha)

Read More:
http://en.wikipedia.org/wiki/Ayyappan