காஷ்மீரக விடுதலைப் போராளி யாசின் மாலிக்கை ஏன் தமிழகத்துக்கு அழைத்து ஈழப்பிரச்சனை பற்றிப் பேச வேண்டும் என்று கேட்கும் தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகளுக்கு மற்றும் இன்ன பிறர் கவனத்திற்கு…
ஜப்பானியர்கள் சுபாஷ்க்கு உதவ எந்த அடிப்படையில் வந்தார்களோ, சே எந்த அடிப்படையில் கியூபா, காங்கோ, பொலிவியா என்று போனாரோ, பெரியார் எந்த அடிப்படையில் கேரளத்தின் வைக்கம் போராட்டத்திற்கு போனாரோ அந்த அடிப்படையில் தான் யாசின் மாலிக்கும் தமிழகத்திற்கு வந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக இவர்கள் வாய்க்கிழியக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையில், காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு.
வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தான் சிறப்பு சலுகை என்று புளுகுகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருபவர் யாசின் மாலிக்.
யாசின் மாலிக்கின் அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜம்மு காஷ்மீரை இந்திய – பாகிஸ்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திர தேசமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
மத வேறுபாடுகள் அற்று, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைத்து மக்களையும் காஷ்மீர் என்ற அடையாளத்துடன் இணைத்து, இந்திய-பாகிஸ்தானிய அரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது ஜே.கே.எல்.எப்.
இந்திய அரசால் காஷ்மீர் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜக்மோகனால் தூண்டப்பட்டு வெளியேறிய “காஷ்மீர் பண்டிட்டு”களையும் காஷ்மீரில் திரும்ப குடியேற்ற வேண்டும் என்று போராடி வருபவர் யாசின் மாலிக்.
1983-ல் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதிக் கட்சிகளே அன்றி “ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னணி” அல்ல.
Source:
Via Fb