ஒரு வைத்திய சாலையில் இரண்டு கட்டில்கள்
ஒரு கட்டில் ஜன்னல் ஓரமாகவும் மற்றைய கட்டில் சற்று தள்ளியும் இருந்தது …
ஜன்னல் ஓரம் இருந்தவர் கட்டிலில் இருந்து எழுந்து இருப்பார் மற்றவரால் தலையை நிமிர்த்தி எழும்பமாட்டார் ..படுத்த படுக்கைதான் ..!
ஜன்னலுக்கு வெளியே நடப்பவற்றை இவர் கூற மற்றவர் கேட்டு ரசிப்பார் …
ஒருநாள் ஜன்னலுக்கு வெளியே நீச்சல் தடாகம் இருப்பதாகவும் அதில் குழந்தைகள் குதித்து விளையாடுவதையும் வர்ணித்துக்கொண்டு இருந்தார் அதைக்கேட்ட மற்றவருக்கு ஆனந்தம் ..
மறுநாள் ஜன்னலுக்கு வெளியே மலையும் அதன் பசுமையையும் விளக்கினார் ..இப்படி நாளுக்கு ஒன்றை விளக்கியவர் ..மற்றவர் ஆனந்தத்தில் மிதப்பார் ……!
ஒருநாள் ஜன்னலோரம் இருந்தவர் இறந்து விட்டார் ….!
கவலைதாங்கமுடியாத மற்றவர் ஜன்னல் ஓரம்
தன் கட்டிலை போடும் படி கேட்க தாதிகள் அவ்வாறே ஜன்னல் ஓரம் கட்டிலை போட்டார்கள் ..
இதுவரை தன் தலையை அசைக்க முடியாமல் இருந்த இவர் ரெம்ப கஸ்டப்பட்டு தலையை தூக்கி
ஜன்னல் ஓரமாம வெளியே பார்த்தார் ….அதிர்ச்சி அடைந்தார் …ஆம் ..வெளியே மலையும் இல்லை
நீச்சல் தடாகமும் இல்லை ..மற்றைய கட்டிடத்தின் பெரும் சுவர் மட்டுமே இருந்தது …
தாதிமாரை அழைத்து இறந்தவர் இப்படியேல்லாம் சொன்னார் இங்கே அவர் சொன்ன ஒன்றுமே இல்லையே என்று கேட்டார் …?
தாதிகள் புன்னகை செய்துவிட்டு பெரியவரே அவருக்கு கண் தெரியாதே எப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றார்கள் ..
முதியோரின் கண்ணோரத்தில் கண்ணீர் வடிந்தது
தான் இருக்கும் காலம் வரை மற்றவர்களை மகிழ்வித்து வாழ்ந்த அந்த மாமனிதனை நினைத்தால் யாருக்குத்தான் கண்ணீர் வராது …?
எல்லோருக்கும் நெஞ்சு கணக்கும் …!
Source:
Via Fb